ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை: பெண் உள்பட 7 பேர் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

News image
Updated On :2 டிசம்பர் 2015, 4:22 pm

சி. உதயகுமார்

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விராலிமலை அருகே உள்ள பல்வேறு பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம்( டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜாளிப்பட்டி தென்னரசு(40) கோமங்களம் கண்ணையா(40) புதுப்பட்டி சின்னையா(53)பெருமாபட்டி தமிழரசி(40) கல்குடி ரங்கசாமி(28) தாளப்பட்டி சுந்தரம்(49) விராலிமலை சோதனைச் சாவடி பாபு(47) உள்ளிட்ட 7 பேரும் அரசு மதுபான பாட்டில்களை அனுமதியின்றி பெட்டிக்கடையில் பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததாக அவர்களை கைது செய்தனர், அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 35 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.